Sunday, February 25, 2024

மற்றோருக்கு மொழி , எமக்கது வழி


பல் மொழி வித்தகனாம் ஒருவன் , தாய் மொழி தவிர 

பிழையா ? என்றான் ஒருவன்.


யாராரோ உற்றவராம் 

ஆராரோ சொன்ன பெற்றவள்  மட்டும் இல்லையாம் , குறையா ? 

கேட்டேன் நான்


„யாதும் ஊரே யாவரும் கேளிர்“ பாடியவர் தம் தமிழ் புலவர் என்றானவன்   


பாரெல்லாம்  ஊர்  ; ஊரெல்லாம்  உறவு , தமிழ் பெருமகனார் சொன்னது பொய்யில்லை . ஆனால் தாய்மொழி  ஊரல்ல...உறவல்ல ..உயிரல்லவோ ?

ஊரது இலையாய் இருக்க உறவதன்   கிளையாய் இருக்க , தாய்மொழி வேர் போன்றது என்றேன் நான்  


வேருக்கு நீரூற்றுவோம்!!! 

அனைவருக்கும் எமது உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்!

No comments: