திசை
அறியா பறவையொன்று
போர்
விமான விசையில் அலறியதில்
சிதறிய எச்சத்தின்
மிச்சமாய் மண் சேர்ந்ததொரு வித்து .
விடியல்
காண்பதில்லை புதையாத விதை
போர்க்களத்தில்
விடியல் எங்கே விசும்பியது அது
குண்டடி பட்ட ஒரு(மற)வன் ஓலத்துடன்
மேல்
விழ
மண்ணில்
புதைந்தது விதை .
போருக்காக
போர் செய்தவனோ
சோறுக்காக
போர் செய்தவனோ
அறியோம்
நாம் ; அவனுதிரம் உதிர
உயிரானது விதை , உடலானது சதை
„என்னானானோ“
பதறியது சுற்றம்
எண்ணாயிருந்தான்
அவன் அப்போது
இன்னும்
எத்தனை எண்களோ ?
தகப்பனின்
கல்லறை மேல் அரியணை
தனியான
தனயனின் குறை தீர்க்க
முரணுக்கு
அறம் இல்லை. ..அரணும் இல்லையா ?
மண்ணுரிமைக்கு மனித உயிரா ?
கொல்லப்படுவது மனிதம்
எனில்
வெல்வதெப்படி வீரமாகும்
?
எளியோனை
சிதைக்கும் வலியோனே
போர்
வலியென்று அறிவாயா நீ
கொன்று
வென்று பிணம் குவித்த சுடுகாட்டில்
ஆவிகளுக்கு
அரசனாக எண்ணமா ?
கணக்கிலடங்கா
சிதைகள்; கூட கறபனைக்கெட்டாத சித்ரவதைகள்
களத்தில்
இல்லாது வேறு கண்டத்தில் பட்டிமன்றம்
நடந்தவை
குற்றமா இல்லையா என்று.
வெள்ளையான
மாளிகையென்பதால் அழுக்கிருக்காதா என்ன ?
விழித்தெழு
; மனிதம் வீழாமல் பார்த்து கொள்.
ஜெயம்கொண்டாரே
பயம் கொள்ளும் கொடுமைகள்
இனி
நடவாமல் இருக்கட்டும்.
போர்
துறப்பது அறம் மட்டுமல்ல; மறமென்றுணர்
தரணியது புது பரணி பாடும்
உனக்கு
„எய்தவன்
அறியா அம்பானோம் நீயும் நானும்“
மலரான
வித்து ஆறுதலாய் சேதிசொன்னது செத்தவனுக்கு .
இறப்பிற்கு
அழுவதா, பிறப்பிற்கு மகிழ்வதா
தான்
வந்த திசை தவறானதென்று , வித்திட்ட பறவை விம்மியது.
No comments:
Post a Comment