Wednesday, February 26, 2025

சிறகின் பாரம் இறகுக்கு

 சல்லி சல்லியாய் உடைந்து கொண்டிருக்கிறேன்

என்னை என்னிடமே இழந்து கொண்டிருக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்! மறைந்து கொள்கிறேன் !

திரும்ப கிடைக்காத இடத்தில கொடுத்தது வைத்தது யார் தவறு 

திரும்ப தருகிறேன் என்று யாரும் சொல்ல வில்லை 

இருந்தாலும் கொடுத்தேன் சற்றே அளவுக்கு அதிகமாய் 

கொடுத்து விட்டதை எண்ணி கலங்குகிறேனா ...

ஏதும் கொடுக்கப்படவில்லை என வருந்துகிறேனா

எதிர்பார்ப்புகள் இல்லாத உறவும்  இயலுமா 

எல்லாமிருக்கிறது என்னிடம் என்னை தவிர 

பேச முயல்கிறேன் ,சொல் எழவில்லை

அழ தவிக்கிறேன், கண்ணீர்  துளிர்க்கவில்லை 

ஒன்றாய் சேர்த்து கொட்டி அழுது விட்டால் முடிந்து விடுமா ?

முடிய வேண்டுமா ? 

துயரை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறேன் !

துயர் இறந்தால் நானும் இறந்து விடுவேனோ ? அறியேன் நான் 

No comments: